பிரான்ஸ், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 07 பொதிகளில் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்திலுள்ள கூரியர் முகவர் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் 07 பொதிகளில் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பிரான்ஸ், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு, மஹரகம மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளிலுள்ள சிலருக்கு இந்தப் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. இப்பொதிகளை விசாரணைக்காக சுங்க அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். பின்னர் நடத்திய விசாரணையில் இவை போலி முகவரிகளென உறுதி செய்யப்பட்டது. திறக்கப்பட்ட பார்சல்களில், எக்ஸ்டசி எனப்படும் மெத்தாம்பெட்டமைன் அடங்கிய 310 மாத்திரைகளும், குஷ் என்ற 08 கிலோ கஞ்சாவும், ஐஸ் எனப்படும் 08 கிராம் போதைப்பொருளும், மாண்டி என்ற 310 கிராம் போதைப்பொருளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 60 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.