Sunday, April 28, 2024
Home » O/L பரீட்சையில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவிக்கு கிழக்கு ஆளுநர் பாராட்டு

O/L பரீட்சையில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவிக்கு கிழக்கு ஆளுநர் பாராட்டு

- மாணவியின் வேண்டுகோளொன்றையும் நிறைவேற்றினார்

by Rizwan Segu Mohideen
December 2, 2023 5:52 pm 0 comment

திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்சனா கோணேஸ், க.பொ.த. சாதரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் 6 ஆம் இடத்தையும் தமிழ் மொழி மூலமாக இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். இம்மாணவியை நேரில் அழைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அவரது கல்வி நடவடிக்கையில் அக்கறை செலுத்திய அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் மாணவியின் வேண்டுகோளின் பேரில் பாடசாலை பல நாட்களாக நிலுவையில் இருந்த காணியை அப்பாடசாலைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையும் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT