438
புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமட்டாவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முந்தலைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் ஏணி மூலம் வீட்டிற்கு முன்பாக காணப்பட்ட மின்சாரத் தூணில் ஏறி மின்குமிழை பொருத்திக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.