Sunday, April 28, 2024
Home » நாடளாவிய ரீதியிலான மழை நிலைமை மேலும் விருத்தியடையும்!

நாடளாவிய ரீதியிலான மழை நிலைமை மேலும் விருத்தியடையும்!

- பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

by Rizwan Segu Mohideen
November 22, 2023 7:54 am 0 comment

– சில இடங்களில் 100 மி.மீ. வரை பலத்த மழை

இன்றையதினம் (22) நாடளாவிய ரீதியில் நிலவும் மழை நிலைமை மேலும் விருத்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT