169
கூந்தல் அலங்கார மின்சாரக் கருவியால் கூந்தலை அலங்கரித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண், பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா சுபாசினி என்ற 30 வயதுடைய மூன்று வயது பிள்ளையின் தாயென தெரியவந்துள்ளது. இவர், தேசிய பயிலுநர் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.