153
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தற்போது விதித்துள்ள தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை வழி நடத்துவதற்கும், இலங்கை எந்தவொரு கிரிக்கட் போட்டித் தொடரையும் இழக்க நேரிடும் அபாயம் இருப்பின் அது குறித்து கலந்துரையாடி உடனடியாக முடிவுகளை எடுப்பதற்கும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உப குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றித் தீர்மானித்தார்.
மேலும், இனிமேல் இடைக்கால குழுக்களை நியமிப்பதாயின், அதற்கு அமைச்சரவையின் அனுமதி அவசியம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.