Monday, April 29, 2024
Home » சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேருக்கு விசித்திர தண்டனை

சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேருக்கு விசித்திர தண்டனை

03 மாதங்களுக்கு சமூகசேவை செய்ய பணிப்பு

by Gayan Abeykoon
November 15, 2023 1:23 am 0 comment

சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றும் மிருகவதை செய்த குற்றச்சாட்டில் வெலிசறை நீதிவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர் உட்பட 18 பேருக்கு, 07 வருடங்களுக்கு  இடைநிறுத்தப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து வெலிசறை நீதிவான் புத்திக உடுவவிதான உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று மாதங்களுக்கு சமூக சேவை செய்யுமாறும் நீதிவான் இவர்களுக்கு உத்தரவிட்டார்.

சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கைப்பறற்ப்பட்ட சுமார் 03 இலட்சம் ரூபா பெறுமதியான 11 சண்டைக் கோழிகளை, குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள அரச கால்நடை பண்ணையில் ஒப்படைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT