565
நிலச்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த பதுளை கொழும்பு வீதி மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக, ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் (07) பிற்பகல் வேளையில் ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பதுளை – கொழும்பு வீதியில் பெரகல மற்றும் ஹல்தும்முல்லை பகுதிக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த வீதியிலிருந்து மண் அகற்றப்பட்டு போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.