170
இலங்கை கடற்றொழிலாளர்களின் தொழில் மேம்பாடுகளுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது.இதுகுறித்து நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த ஜப்பான் தூதுவர் உறுதியளித்தார்.கடற்றொழில் அமைச்சுக்கு வருகை தந்த ஜப்பான் தூதுவர், இது குறித்து அமைச்சருடன் நீண்ட கலந்துரையாடலை நடத்டதினார். இதில் தூதரக அதிகாரிகள், அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.