Monday, April 29, 2024
Home » நாட்டில் 23 வீதத்தினர் நீரிழிவு நோயால் பாதிப்பு

நாட்டில் 23 வீதத்தினர் நீரிழிவு நோயால் பாதிப்பு

by damith
November 6, 2023 7:40 am 0 comment

நாட்டில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயால் ஆபத்திலுள்ள உலகின் முதல் பத்து நாடுகளுக்குள் இது, உள்ளதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழக மருத்துவத் துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த: நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில், 2006 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையின் சனத்தொகையில் 10 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT