Sunday, April 28, 2024
Home » 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் அறிவிப்பு
இரத்தினபுரி மாவட்டம்;

16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் அறிவிப்பு

by damith
November 6, 2023 7:55 am 0 comment

தொடராக இரத்தினபுரி மாட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் பரவலாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக இம்மாவட்டத்தில் உள்ள 18 பிரதேச செயலக பிரிவுகளின் 16பிரிவுகளில் மண் சரிவு ஏற்படலாம் என அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட காரியாலயம் பிரதேச கிராம சேவகர்கள் மூலமாக இந்த அபாய அறிவிப்பை விடுத்துள்ளது. இதற்கிணங்க பலாங்கொடை, இம்புல்பே, வெலிகபொல, கொடக்கவெல, ஓப்பநாயக்க, பெல்மதுளை, இரத்தினபுரி, எலபாத்த, இறக்குவானை, எஹலியகொடை, குருவிட்ட, கலவான ஆகிய பிரிவுகளுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் நிவித்திகல, அயகம, கஹவத்தை, கிரியெல்ல, பெல்மதுளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கு மிக அவதானமாக இருக்குமாறு மஞ்சள் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT