Thursday, May 9, 2024
Home » இலங்கை அதிபர் சேவை தரம் III; மேல் மாகாணத்திலிருந்து 907 பேர் தெரிவு

இலங்கை அதிபர் சேவை தரம் III; மேல் மாகாணத்திலிருந்து 907 பேர் தெரிவு

-96 பேர் சிறுபான்மையினர்

by sachintha
October 25, 2023 9:53 am 0 comment

 

இலங்கை அதிபர் சேவை மூன்றாம் தரம் (SLPS Grade111) அதிபர் சேவைக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழி வாரியாக மேல் மாகாணத்திலிருந்து 907 பேர் தெரிவாகியுள்ளனர்.

இந்த அதிபர் சேவை பரீட்சையில் மேல் மாகாணத்தில் தெரிவாகியுள்ளவர்களில் 96 பேர் மாத்திரமே தமிழ் மொழிமூல அதிபர்களாக தெரிவாகியுள்ளனர். இவர்கள் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள கல்வி வலயங்களின் பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி அதிபர் சேவைக்கு தெரிவானவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் திகதி முதல் அமுலாகும் விதமாக நியமனம் வழங்கப்படவுள்ளது.

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மதுகம மற்றும் ஹொரண கல்வி வலய தோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலரும் புதிய அதிபர் சேவைக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT