முல்லைத்தீவில் சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு நகரில் நடைபெற்றது. முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் சரத் சந்திரநாயக்க, நீரியல்வள உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட சம்மேள தலைவர் வி.அருள்நாதன், கடற்றொழில் அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் பத்மன் எனப் பலரும் கலந்து கொண்டு கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வைத்தனர்.
கடற்றொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக 75 லீற்றர் வீதம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் இரண்டாம் கட்டமாக 78 லீற்றர் என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
(ஓமந்தை விசேட நிருபர்)