280
மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி ஆரத்தியெடுத்து வரவேற்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம். ஜனாதிபதி, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ். வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரை மட்டு. புனித மைக்கல் கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக்ற் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.