221
மத்திய மாகாண சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய மாகாண சபை மற்றும் இந்திய தூதுவராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் ஓரங்கமாக கண்டி, இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயம் மற்றும் மத்திய மாகாண வர்த்தகம், வாணிப, சுற்றுலாத் திணைக்களம் என்பன இணைந்து கண்டியில் கல்வி, வர்த்தக கண்காட்சியொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பாரம்பரிய உணவுகளை எடுத்துக்காட்டும் உணவுத் திருவிழாவும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே மற்றும் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் எஸ். ஆதிரா ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பலரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
(அக்குறணை குறூப் நிருபர்)