369
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை மாணவர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இப்போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவன் கே. பவிசன் பலத்த போட்டிக்கு மத்தியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அதேவேளை இந்த பிரிவில் எஸ்.டிருஷாந்த், எஸ்.டிரோன் ஆகிய இரு மாணவர்களும் வெள்ளிப் பதக்கத்தையும் என்.நிருகாஷ், ஆர்.ருகேஷ்நாத் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
அதேவேளை குறித்த தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் டேக்வாண்டோ விளையாட்டு பிரிவில் சிவானந்தா பாடசாலையை சேர்ந்த ஐ.சர்வகன் வெண்கலம் பெற்றார்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்