Sunday, May 12, 2024
Home » மட்டக்களப்பு வேன் விபத்து; 4 வயது சிறுமி உட்பட இருவர் மரணம்

மட்டக்களப்பு வேன் விபத்து; 4 வயது சிறுமி உட்பட இருவர் மரணம்

by Prashahini
September 19, 2023 10:27 am 0 comment

செங்கலடி- வாழைச்சேனை பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது நேற்று (18) மாலை செங்கலடி- வாழைச்சேனை பிரதான வீதியில் சந்திவெளி என்னும் இடத்தில் சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்ததாகவே இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 54 வயதுடயை முகம்மது இப்றாகீம் முகம்மது ஹுசைன் மற்றும் அவரது பேரப்பிள்ளையான 04 வயது முகம்மது நுபைல் ஹிபா செரீன் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ஒருவர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏறாவூர் சுழற்சி நிருபர் – எம்.எஸ்.எம்.றூமி

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT