Saturday, May 11, 2024
Home » யாழில் 54 வயது குடும்பஸ்தர் கட்டி வைத்து அடித்துக் கொலை; 6 பேர் கைது

யாழில் 54 வயது குடும்பஸ்தர் கட்டி வைத்து அடித்துக் கொலை; 6 பேர் கைது

- 19 வயது பெண்ணுடனான காதலால் நேர்ந்த அவலம்

by Prashahini
August 8, 2023 9:37 am 0 comment

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கிராமத்தவர்களால் கட்டி வைத்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

சங்குவேலி பகுதியை சேர்ந்த மரியதாஸ் ஜெகதாஸ் (54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த குறித்த இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது ஊரை விட்டு வெளியேறி இருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால், இருவரும் நேற்று (07) ஊர் திரும்பியுள்ளனர்.

அவ்வேளை ஊரவர்கள் குறித்த குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனால் மயக்கமடைந்த நிலையில் அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சுன்னாகம்’ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இது வரையில் 06 பேர் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT