திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- தோப்பூரைச் சேர்ந்த 31 வயதுடைய அப்துர்ரஹ்மான்-அன்சார் (சுஜா) எனவும் தெரியவருகிறது.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் உடல் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு, விபத்து தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரொட்டவெவ குறூப் நிருபர் – அப்துல்சலாம் யாசீம்