மனுஷ நாணயக்கார மற்றும் ஹரீன் பெனாண்டோ ஆகியோரை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சராக ஹரீன் பெனாண்டோவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்காரவும் அங்கம் வகிக்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்களான குறித்த இருவரும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்த போது, அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்ததோடு, குறித்த இருவரும் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதோடு, அமைச்சுப் பதவிகளிலும் நீடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.