Home » 9 வயது மாணவியை தாக்கிய அதிபர் கைது

9 வயது மாணவியை தாக்கிய அதிபர் கைது

- யாழ். தீவக பகுதியில் சம்பவம்

by Rizwan Segu Mohideen
July 16, 2023 11:23 am 0 comment

– மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை

யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலையின் அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (16) கைது செய்துள்ளனர்.

மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினவிய போது, தாம் அதிபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், நாளை (17) திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளை முன்னெடுக்கவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT