சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹென்கொட பிரதேசத்தில் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது நேற்று (18) செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 67 லீற்றர் 750 மி.லீற்றர் மதுபானம் (90 போத்தல்கள்), 1854 லீற்றர் கோடா (10 பீப்பாய்கள்), எரிவாயு சிலிண்டர்கள் 2, எரிவாயு அடுப்பு 2 மற்றும் செப்பு சுருள் 3 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் 35 வயதுடைய ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment