போதையில் மணமகன்: திருமணத்தை நிறுத்திய மணமகள்

அசாமில் உள்ள நல்பாரி மாவட்டத்தில் மணமகன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு மயங்கி விழுந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். நல்பாரி நகரில் வசிப்பவர் பிரசென்ஜித் ஹலோய் என அடையாளம் காணப்பட்ட மணமகன் சடங்குகளில் கூட பங்கேற்க முடியாத நிலையில் போதையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்தார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும்,  மணமகள் திருமணத்தை நிறுத்தியதுடன் மணமகளின் குடும்பத்தினர் நல்பாரி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததோடு,  திருமணத்திற்கு இழப்பீடு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...