அட்டாளைச்சேனை சரப் விளையாட்டுக்கழகத்திற்கு புதிய சீருடை

அட்டாளைச்சேனை சரப் விளையாட்டுக்கழகத்திற்கு சீருடை வழங்கும் நிகழ்வு அதன் தலைவர் S.M. றிஸ்வி அகமட் தலைமையில் நேற்று (27) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் இராஜங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸால் காசிம் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக விளையாட்டு உத்தியோகத்தர் அஜ்வத் கலந்து சிறப்பித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிமின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இச்சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...