Thursday, June 30, 2022 - 2:16pm
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா உற்சவம் ஜூலை மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 13நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று ஆகஸ்ட் 11-ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருப்பதாக ஆலய பரிபாலன சபை தலைவர் சுதநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.
ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு தற்பொழுது நீர்ப்பாசன திணைக்களம் சிவதொண்டன் அமைப்பு உட்பட பல அமைப்புகள் ஆலய வளாகத்தில் சிரமதானத்தில் ஈடுபட்டு வருகின்றன.
விரைவில் உற்சவத்திற்கான ஆலய பரிபாலன சபை கூட்டம் நடைபெறவிருப்பதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.
காரைதீவு குறூப் நிருபர்
Add new comment