ஜோர்தானில் நச்சு வாயு கசிவு: 13 பேர் பலி

ஜோர்தானின் செங்கடல் துறைமுகமான அகாபாவில் குளோரின் நச்சு வாயு கசிந்து 13 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 250 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இரசாயன சேமிப்பு கொள்கலனை கொண்டு செல்லும்போது கிரேனில் ஏற்பட்ட கோளாறினால் அது கீழே விழுந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலே உயர்த்தப்பட்ட கொள்கலன் பின்னர் திடீரென்று கப்பல் ஒன்றின் மீது விழுந்து வெடிப்பது சி.சி.ரீ.வி கெமராவில் பதிவாகியுள்ளது. மஞ்சள் நிற வாயு அந்தப் பகுதி எங்கும் பரவுவதும் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி தப்பி ஒடுவதும் அதில் தெரிகிறது. காயமடைந்த 199 பேர் உள்ளுர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

தொழில்துறை இரசாயனமாக பயன்படுத்தப்படும் குளோரின் வாயு, அதிக அளவில் வெளிப்படுவது நுரையீரலை பாதிக்கும்.


Add new comment

Or log in with...