சிறுமியிடமிருந்து சங்கிலியை அபகரித்த முன்னாள் படைவீரர் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு; பொருளும் மீட்பு

மட்டக்களப்பு- கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதான சிறுமியின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகே தெரிவித்துள்ளார்.

இவர்கள் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைடுத்து எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனியாக கடைக்குச் சென்று திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த 22 வயதான இளைஞர் ஒருவர், சிறுமியின் கழுத்திலிருந்த 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த நபரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது தங்கச் சங்கிலியைக் விற்பனை செய்வதற்கு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்தது.

இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இரா ணுவ வீரர் மேலும் பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவரென தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கல்குடா நிருபர்

 

 


Add new comment

Or log in with...