சஜித்-சம்பிக்க இடையே மூண்டுள்ள பனிப்போர்; எதிர்காலம் குறித்தும் சம்பிக்க கருத்து

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் எதிர்காலம், கட்சியின் தலைவர் சஜித் பிரேதமாசவின் நடத்தை மற்றும் வேறு சில காரணங்களுக்கமையவே தீர்மானிக்கப்படுமென, அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அப்போதைய சந்தர்ப்பத்திலிருந்த சிறந்த ஒரேயொரு மாற்றுவழி சஜித் என்றும் அதனாலேயே நாம் அதற்கேற்றவாறு செயற்பட்டோமென தெரிவித்த அவர், எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால பயணம் சஜித்தின் செயற்பாடு மற்றும் ஏனைய காரணங்களுக்கு அமைய தீர்மானிக்கப்படுமென்றார்.


Add new comment

Or log in with...