கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் மே 17 இல்

- மாகாண கல்விப் பணிப்பாளர்

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் மே 17ஆம் திகதி இடம்பெறுமென மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்துள்ளார்.

மாகாணக் கல்விப் பணிமனையில்  திங்கட்கிழமை (19) இடம்பெற்ற வலயங்களுக்கிடையிலான இடமாற்றத்திற்கான மேன்முறையீட்டு சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் பாடசாலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இடமாற்றம் செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட திகதியில் சகல தரப்பினரும் கடமையை  பொறுப்பேற்க முடியாமல் போய்விடும் என்பதனாலேயே இத் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.ஆசிரியர் சமூகத்திற்கு பாதிப்பில்லாத வகையில் மேன்முறையீட்டினை மேற்கொள்ளுமாறும் இதன்போது மாகாண பணிப்பாளர் தெரிவித்தார்.

பெரியநீலாவணை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...