முச்சக்கரவண்டி குடை சாய்ந்து விபத்து

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்டதர்டன் தோட்டத்திற்கு அருகில் நேற்று 6/4/2021பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.  

இவ்விபத்து நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஏற்பட்டுள்ளது.  

ஹற்றனில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஹற்றன் - கொழும்பு பிரதான பாதையின் ஸ்டர்டதன் தோட்ட பிரதான பாலத்துக்கு அருகில் வைத்து குடைசாய்ந்துள்ளது. முன்பக்க சக்கரம் திடீரென்று வெடித்ததால் சாரதிக்கு முச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இதன்போது அவ்வழியாக வந்த இ.போ.ச பஸ்சில் பயணித்தவர்கள் உடனடியாக இறங்கி சாரதியையும் மூன்று பெண்களையும் கைக் குழந்தையையும் மீட்டெடுத்தனர். 

கைக்குழந்தைக்கு சிறிய காயம் ஏற்பட்டதால் அந்த குழந்தை வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹற்றன் விசேட நிருபர், நோட்டன் பிரிட்ஜ் நிருபர்   


Add new comment

Or log in with...