‘சினோவக்’ தடுப்பூசி: எழுவருக்கு சுகவீனம்

ஹொங்கொங் நகரில் சீனாவின் சினோவக் தடுப்பீசியை பெற்ற குறைந்தது ஏழு பேர் சுகவீனமுற்றிருப்பதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கடந்த ஒரு வாரத்தில் இந்த தடுப்பு மருந்தை பெற்ற பின் மொத்தம் 18 பேர் மருத்துவ சிகிச்சைக்கு ஆளாகி இருப்பதோடு இது சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்ற சுமார் 91,800 பேரில் 0.019 வீதமானவர்களாக இருப்பதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

கொவிட்–19 தொற்று சீனாவில் இருந்தே தற்போது உலகெங்கும் பரவியமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...