அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நாள் குறித்து ரஜனி அறிவிப்பு

- டுவிட்டர் பதிவினை நேற்று வெளியிட்டார்

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

ஆனாலும் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து விட்டார்.

விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று தனது, ருவிட்டர் பக்கத்தில் அரசியல் பிரவேசம் குறித்து பதிவேற்றியுள்ளார்.குறித்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது,

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...