துப்பாக்கி முனையில் சுமார் ரூ. 3 கோடி கொள்ளை

கட்டான, அக்கறபஹ பிரதேசத்தில் சுமார் 3 கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு வந்த 5 பேரைக் கொண்ட குழுவினால் இக்கொள்ளைச் சம்பவம் புரியப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.  

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கட்டான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...