Friday, May 15, 2020 - 5:02pm
தற்போது காலாவதியாகியுள்ள வாகன வருமான பத்திரங்களை மீள் புதுப்பிக்க ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண பிரதான செயலாளர் இதனை அறிவித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மார்ச் 13ஆம் திகதி முதல் ஜூலை 31 வரையான காலப் பகுதியில், காலாவதியாகும் வாகன வருமான வரி பத்திரங்களுக்கு அபராதம் எதுவும் அறவிடப்படமாட்டாது என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Add new comment