திரிபோஷவை வீடுகளுக்கு சென்று விநியோகிக்க நடவடிக்கை

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான  திரிபோஷ மாவை, குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள்  மூலம் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

கடந்த மாதம் குழந்தைகள் காணப்பட்ட நிறைக்கு அமைய, திரிபோஷவை விநியோகிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய விட்டமின்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, கிளினிக்களை நோயெதிர்ப்புடையதாக பேணுமாறும், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Add new comment

Or log in with...