திருகோணமலையில் நிவாரணப் பணி முன்னெடுப்பு

நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் நாளாந்த கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு இலங்கை உளவியல் ஆலோசனை மையம் (PAC)  தனது மனித நேய நிவாரணப்பணியை மேற்கொண்டு வருகின்றனது.

அதற்கு அமைவாக திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகத்தின் பாலத் தோப்பூர் கிராம சோவையாளர் பிரிவின் மருதநகர் பகுதியில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள்உளவியல் ஆலோசனை மையத்தின் திருகோணமலை உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

(அப்துல் பரீட் - திருமலை மாவட்ட விசேட நிருபர்)


Add new comment

Or log in with...