ஐ.தே.க. செயற்குழுவிலிருந்து ரோஸி, இம்தியாஸ் நீக்கம்

சஜித் உள்ளிட்ட 35 பேர் செயற்குழு கூட்டத்தை பகிஷ்கரிக்க தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலிருந்து கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஆகியோர் நேற்றிரவு (29) நீக்கப்பட்டுள்ளதாக, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விற்றர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா மற்றும் அஜித் பீ. பெரேரா ஆகியோர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக ஏற்கெனவே நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட 35 செயற்குழு உறுப்பினர்கள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லையென முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...