சாரதி அனுமதிப்பத்திர மருத்துவ சான்றிதழ்; மூன்று பிரதேச அலுவலகங்கள் ஸ்தாபிப்பு

அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வைத்திய அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக 3பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவம் மின் சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.  

அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான வைத்திய அறிக்கை சான்றிதழை போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் நெருக்கடியை தவிர்ப்பதற்கு தேவையான மாற்று நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.  

வைத்திய சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக பெரும்பாலானோர் கொழும்புக்கு அப்பால் வெளி இடங்களில் இருந்து வருகை தருகின்றனர். இவர்களின் வசதிக்காக மூன்று பிரதேச அலுவலகங்கள் புதிதாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரத்தினபுரி, பண்டாரவளை, நுவரெலியா பிரதேசங்களில் உள்ள மக்களின் வசதிக்காக அலுவலகம் ஒன்றும் அவிசாவளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் போன்று வட மத்திய மாகாண மக்களுக்காக துணை அலுவலகம் ஒன்றும் தம்புள்ளையில் ஆரம்பிக்கப் படவுள்ளது.  

இதேபோன்று வடமேல், கம்பஹா மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள பிரதேச மக்களுக்காக  நீர்கொழும்பில் துணை அலுவலகம் ஒன்றையும் அமைப்பதற்கு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் தீர்மானித்துள்ளது.  

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அலுவலகங்களை அமைப்பதற்கான பணிகளை துரிதமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வாகன அனுமதி பத்திரத்தை அச்சிட்டு வெளியிடக்கூடிய வசதிகளையுடைய அலுவலகம் ஒன்றை அநுராதபுரத்தில் அமைப்பதற்கும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.  

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தொகை பணத்தையும் காலத்தையும் செலவிட்டு கொழும்புக்கு மக்கள் வருவது இதன் மூலம் தவிர்க்கப்படுகின்றது.   


Add new comment

Or log in with...