118
கண்டி, அக்குறணை பிரதேசத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தார். அக்குறணை நகரில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமான பாலத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமாகவும் கேட்டறிந்துகொண்டார்.
இச்சந்திப்பில், மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், உயர்பீட உறுப்பினரான ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான றம்சான் ஹாஜியார், நசீர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.