180
யாழ்ப்பாண சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (31) சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் அரசடியைச் சேர்ந்த கணேஷ் நிசாந்தன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இளைஞர், கடந்த 26ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவருமென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
யாழ். விசேட நிருபர்