இந்தியாவின் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்டமாக புதிய கோவில் கட்டப்பட்டு கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் அயோத்தி ராம் மந்திர் பூஜைகள் இடம்பெற்றன. இலங்கையிலும் விசேட ராம் பூஜை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. ராம்பூஜை இவன்டஜி எக்ஸ்டன்ஸைச் சேர்ந்த காயத்ரி சுவீந்திரன், ஞானகுமார் சிதம்பரம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ராமகிருஷ்ண சுவாமிஜி கலந்து கொண்டதுடன் சின்மியா மிஷன் தலைவர் சுவாமி குனைந்திநந்தா, ராமாயண ஆய்வாளர் அனித்தா போஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையை செல்வி பிரத்திக்கா சுவீந்திரன் நிகழ்த்தியதுடன் ஸ்ரீராம் பாடலையும் அவர் பாடினார். புஸ்பாஞ்சலி நடனத்தை செல்வி சுவஸ்திகா சுவேந்திரன் நிகழ்த்தினார். சுந்தரேசர் கலைக்கோவில் நடனப்பள்ளி மாணவிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றது. விசேட உரையை, ராமாயண ஆய்வாளர் அனித்தா போஸ் நிகழ்த்தினார். பூஜை வழிபாடுகளை செந்திமாராஜ் நடாத்தினார்.
கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்