186
பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் 24 மணிநேரமும் இச்சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர். பண்டிகைக் காலத்தின் போது அதிகளவான விபத்துகள் ஏற்படுவதை ஏற்கெனவே அவதானித்த நிலையில், பெறுமதியான உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த பொலிஸார், தமது நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.