145
வெலிமடையிலிருந்து ஊவா பரணகம நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில், அம்முச்சக்கரவண்டிச் சாரதிகள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் இரு முச்சக்கரவண்டிகளும் குடைசாய்ந்து விழுந்ததாகவும் இம்முச்சக்கரவண்டிகளிலொன்று அருகிலுள்ள ஆற்றில் விழுந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
வழிப்பயணிகளின் முயற்சியால் சாரதிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துத் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
ஊவா சுழற்சி நிருபர்