519
பிரபல வர்த்தகரான தேசமான்ய கலாநிதி லலித் கொத்தலாவல காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
1938 ஒக்டோபர் 29 ஆம் திகதி பிறந்த லலித் கொத்தலாவல இறக்கும் போது 85 வயதாகும்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியவர்களில் ஒருவராவார்.
லலித் கொத்தலாவல செலிங்கோ கன்சோலிடேட்டட் (Ceylinco Consolidated) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், செலான் வங்கியின் (Seylan Bank) ஸ்தாபகத் தலைவரும் ஆவார்.