132
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை, உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இக்குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என 120 வெவ்வேறு பொருட்களை அடையாளம் காணும் திறனைப் பெற்றுள்ளது. இதனால், இக்குழந்தை சாதனை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இக்குழந்தையின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தவதற்கு, வீடியோவாக நோபல் உலக சாதனைக்கு அனுப்பியதாக குழந்தையின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.