341
கிண்ணியா நடுஊத்து பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் ஞாயிற்றுக்கிழமை (11) அல் றவ்ழா வித்தியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.
தன்னார்வ தொண்டு நிறுவனமான அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் IHHNL எனும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் அதன் பிரதிநிதி அப்துர் ரஹ்மான் காதிரிசியின் பிரசன்னத்துடன் பெறுமதிமிக்க பொதிகள் வழங்கப்பட்டன.
அல் ரவ்ழா வித்தியாலயத்தின் அதிபர் கானுதீன் பிர்தௌஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், சமூக சேவையாளர் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் தலைவர் பாதிஹ் கஸ்ஸாலியும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கிண்ணியா தினகரன் நிருபர்