புத்தாண்டில் (2024) கொழும்பைச் சுற்றி 10, 000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
11 வீட்டுத் திட்டங்களின் கீழ், இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுத் திட்டம் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்காக கிட்டத்தட்ட 6,500 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.
இவற்றில், ஆறு வீடமைப்புத் திட்டங்கள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக 552 மில்லியன் சீன யுவான் (22 பில்லியன் ரூபா) உதவியாகப் பெறப்படும். அத்தோடு, 1996 வீடுகளும் நிர்மாணிக்கப்படும்.
எதிர்வரும் மார்ச் மாதம் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும். இவ்வகையில் 2024 ஆம் ஆண்டில் கொழும்பைச் சுற்றி 10, 000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.