நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த நிலையில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று அதன் பராமரிப்பு சேவை நிறைவைத் தொடர்ந்து, இன்று (11) தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களில் அதன் 2 மின்னுற்பத்தி இயந்திரங்கள் அண்மையில் அதன் பராமரிப்பு நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் (09) ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக மற்றைய மின்னுற்பத்தி இயந்திரம் செயலிழந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஏற்கனவே பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்ட மின்னுற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை, இன்று தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாட்டில் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நீர் மின்னுற்பத்தி போதிய அளவில் இடம்பெற்று வருவதால் தேசிய மின்சார விநியோகத்திற்கு எவ்வித தடங்கலும் இருக்காது என, இலங்கை மின்சார சபை சுட்டிக் காட்டியுள்ளது.