பாணந்துறை – பள்ளிமுல்லை தீனிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர் (ஆலிம்கள்) ஒன்று கூடல் நிகழ்வு அண்மையில், கண்டி மர்கஸ், லைன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா கண்டி மாவட்டக் கிளை பொதுச்செயலாளர் அல் ஆலிம் ஏ.எல். அப்துல் கfப்fபார் (தீனி) தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.தெஹிவளை – “ஹை அதுல் குர்ஆன்” மேற்படிப்பு மாணவர் அல் ஆலிம் எம்.என். அப்துல்லாஹ் (தீனி) கிராஅத் ஓதி நிகழ்வில், கண்டி fபுர்கானிய்யா தாருல் உலூம் ஆசிரியர் அல் ஆலிம் எம்.ரீ.எம். இக்ராம் (தீனி) வரவேற்புரையையும், அல் ஆலிம் ஏ.எல். அப்துல் க ப்fபார் (தீனி) தலைமை உரையையும் நிகழ்த்தினர். குருநாகல் – சியம்பளாகஸ்கொட்டுவ, நூரிய்யா அரபுக் கல்லூரி அதிபர் அல் ஆலிம் எஸ்.டி.எம். முனவ்வர் (தீனி) இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, கல்லூரியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் பழைய மாணவர்களை ஒன்று சேர்க்கும் பணி, மிக நீண்ட நாட்களாக எமது கனவாகவே இருந்தது. தற்போது இது நனவாகியுள்ளது. எமது, கனவை நனவாக்கிய பெருமை நமது கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களையே சாரும்.