தவறிழைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனையளிப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் வரையப்பட்டுள்ள புதிய சட்டமூலமொன்று, அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே, அவர் இதனை தெரிவித்தார். தமது பதவியின் கௌரவத்தை பாதுகாக்க தவறுகின்ற மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில், இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்ற தர நிர்ணய சட்டமூலம் என்ற பெயரிலான குறித்த இச்சட்டமூலம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுயாதீனமான குழுவொன்றின் ஊடாக தண்டனை விதிப்பதற்கு குறித்த சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லோரன்ஸ் செல்வநாயகம்